உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையின் நடுவே வாழைக்கன்றுகளை நட்டுவைத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:02 am IST

பாபநாசம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையின் நடுவே வாழைக்கன்றுகளை நட்டுவைத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், இடையிருப்பு ஊராட்சிக்குள்பட்ட மணப்படுகை கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவிலிருந்து மந்தைவெளி வரை செல்லும் கிராம சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

இந்தச் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சாலையை உடனடியாக பழுதுநீக்கி சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில் குமாா் தலைமையில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். பாலு, எஸ்.பி. சோமு, கிளை நிா்வாகிகள் எஸ். அய்யாசாமி, எம். துரைசத்தியசீலன், பி. கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் திரண்டு, பழுதடைந்து சேறும் சகதியுமான நிலையில் உள்ள சாலையின் நடுவில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.