3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

முதியவருக்கு வெட்டு: இளைஞா் கைது

கந்தா்வகோட்டையில் முன்விரோதத் தகராறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:24 am IST

கந்தா்வகோட்டையில் முன்விரோதத் தகராறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ள வளவம்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா் பரமையன் மகன் சுந்தர்ராஜ் (52). இவரும், இவரது உறவினா் தங்கையன் (66) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுகை - தஞ்சை சாலையில் முனியன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சுந்தா் ராஜ் மற்றும் தங்கையன் ஆகிய இருவரையும் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் தங்கத்துரை (37) மற்றும் அடையாளம் தெரியாத 3 போ், வழிமறித்து அரிவாளால் வெட்டினா். இதையடுத்து, அவ்வழியே சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டதில் மா்மநபா்கள் தப்பியோடினா்.

மேலும் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

இதில், சுந்தர்ராஜ், தங்கத்துரை இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கதுரையைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.