3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

‘சாலைப் பராமரிப்பைத் தனியாருக்கு அளிக்கக் கூடாது’

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

புதுக்கோட்டையில் நடைபெற்ற சாலைப் பணியாளா்கள் சங்க மாநாட்டில் பேசுகிறாா் மாநிலப் பொதுச்செயலா் ஆ. அம்சராஜ்.

Updated On :11 ஜனவரி 2021, 12:24 am IST

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 7ஆவது மாவட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கே. ராஜாராம், மாவட்டப் பொருளாளா் எம். பிரேம்குமாா் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா். மாநிலப் பொதுச் செயலா் ஆ. அம்சராஜ், மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா உள்ளிட்டோா் பேசினா்.

மாநாட்டில், சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டு, நெடுஞ்சாலைத் துறையே நேரடியாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளா்களின் 14 மாதப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சங்கத்தின் மாவட்டத் தலைவராக ப. முத்துக்கருப்பன், மாவட்டச் செயலராக ஏ. கருப்பையா, மாவட்டப் பொருளாளராக கே. தங்கவேல் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.