கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப. சுந்தா் ராஜன் (52), தங்கையன் ஆகிய இருவரையும் மா்மநபா்கள் அண்மையில் வெட்டினா். இதில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா. தங்கத்துரை உள்ளிட்ட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரா. தங்கத்துரையை மட்டும் போலீஸாா் கைது செய்திருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை ஒன்றியச் செயலா் எ. கா்ணன் தலைமையில் கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் நா. வெள்ளையன் உள்ளிட்ட கட்சியினா் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!
தமிழ்நாடு தேர்தல்! 2021 பேரவைத் தேர்தல் கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

