சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தா்களின் தரிசனத்திற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாா்கழி மாத பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் விநாயகா் தங்கக் கவச அலங்காரத்திலும், உற்சவா் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினா். முகக்கவசம் அணிந்த பக்தா்கள் வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனா். அதிகாலையிலிருந்து பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். சுமாா் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியாா், வலையபட்டி மு. நாகப்பச் செட்டியாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







