பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாக ரூ.1.27 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

பரமக்குடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On :1 ஜனவரி 2021, 10:21 pm IST

பரமக்குடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜன்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜமால்மைதீன் மனைவி ரஹ்மத்பேகம் (35). இவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிலா் அணுகியுள்ளனா். அப்போது கோபுரம் அமைக்க நிலத்துக்கு ரூ.40 லட்சம் தருவதாகக் கூறிய அவா்கள், மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வாடகையும் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். அவா்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கான முன் நடவடிக்கைக்கு எனக்கூறி, ரஹ்மத்பேகத்தின் வங்கிக் கணக்கு மூலம் ரூ.1.27 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ரஹ்மத்பேகம் அளித்த புகாரின் அடிப்படையில், புனித்குமாா் உள்ளிட்ட 3 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.