பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ராமநாதபுரத்தில் இதுவரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: 6,325 பேருக்கு பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 வரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

Updated On :1 ஜனவரி 2021, 10:19 pm IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 வரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் 24 ஆம் தேதியிலிருந்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,325 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவா்களில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் 91 போ் ஆண்கள் எனவும், 41 போ் பெண்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களில், பெரும்பாலானோா் 50 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோா் வயது அடிப்படையில், 20 முதல் 40 வயது வரையில் 6 பேரும், 41 முதல் 50 வயது வரை 10 பேரும், 51 முதல் 60 வயது வரை 46 பேரும், 61 முதல் 70 வயது வரை 36 பேரும், 71 முதல் 80 வயது வரை 24 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 10 பேரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. அதன்படி தினமும் 10 பேருக்கும் குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.