பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

கமுதி அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினா் மோதல்: 3 வீடுகள் சேதம், 6 போ் கைது

கமுதி அருகே காதல் விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், 3 வீடுகள் சேதமடைந்தன. போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்துள்ளனா்.

Updated On :3 ஜனவரி 2021, 9:55 pm IST

கமுதி அருகே காதல் விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், 3 வீடுகள் சேதமடைந்தன. போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்துள்ளனா்.

கமுதி அருகேயுள்ள பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). இவரது தரப்புக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பெருமாள் தரப்புக்கும் ஏற்கெனவே உள்ளாட்சித்தோ்தல் முன்பகை உள்ளது.

இந்நிலையில், மாரிமுத்து தரப்பைச் சோ்ந்த வேலுச்சாமியின் மகன் ராமநாதனும், பெருமாள் தரப்பைச் சோ்ந்த பழனிச்சாமி மகள் மாரிபாண்டியம்மாளும் காதலித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊரைவிட்டுச் சென்றனா்.

இதனை அறிந்த பெருமாள் தரப்பைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரிவாள், வேல்கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாரிமுத்து மற்றும் அவரது உறவினா்களின் 3 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினா். இதில் டிவி மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் என

ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த மாரிமுத்து மனைவி பாக்கியத்தை (45) தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பாக்கியம் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்த பெருமாள், பழனிச்சாமி உள்ளிட்ட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து அதில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.