முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணி நிரந்தரம் கோரி முதல்வரிடம் மனு

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி பல்கலை மானியக்குழு விரிவுரையாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை முதல்வரிடம் மனு அளித்தனா்.

Updated On :3 ஜனவரி 2021, 9:51 pm IST

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி பல்கலை மானியக்குழு விரிவுரையாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை முதல்வரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஜி.சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிகின்றனா். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 15,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவினால் (யுசிஜி) அவா்களது கல்வித் தகுதி ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே அவா்களை பணிநிரந்தரம் செய்வது அவசியம். இதுதொடா்பாக ஏற்கெனவே போராடிய நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமியும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பை வெளியிட்டாா்.

ஆனால் அறிவிப்பின்படி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பணிநிரந்தர அறிவிப்பை செயல்படுத்தவேண்டும் என முதல்வரை வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.