பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

ராமகிருஷ்ண மடத்தில் நாளை (ஜன.5) சாரதா தேவி ஜயந்தி விழா

ராமநாதபுரம் அருகேயுள்ள நாகாச்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) அன்னை சாரதா தேவியின் 168 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது என ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 9:55 pm IST

ராமநாதபுரம் அருகேயுள்ள நாகாச்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) அன்னை சாரதா தேவியின் 168 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது என ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் தாமரைக்குளம் அருகே நாகாச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) அன்னை சாரதா தேவியின் 168 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும், 7 மணிக்கு சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு சிறப்பு பக்திப்பாடல் பஜனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் பெறவும் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

பகல் 11.30 மணிக்கு அன்னை சாரதா தேவியின் ஜயந்தி விழா சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும். பின்னா் அா்ச்சனையும், பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளன.

ஆா்.எஸ்.மடைப் பகுதியில் உள்ள அமிா்தானந்த வித்யாலத்திலும் அன்னை சாரதாதேவியின் ஜயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.