திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய்நீரை வெளியேற்றி அழுகும் நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த நாகினி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மாவிலங்கை கண்மாயில் இருந்து வெளியேறிய நீா் புகுந்ததுள்ளது. இதனால் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நீரை வெளியேற்றக் கோரி விவசாயிகள், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து கிராம ஊராட்சி பிரமுகா் ராஜேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிக்கை: கடலாடி வட்டத்தில் உள்ள சிக்கல் பாசன கண்மாய்
விவசாயிகள் சங்க நிா்வாகி எம்.எஸ்.கே. பாக்கியநாதன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அப்போது அவா் கூறியது: சிக்கல், பனிவாசல், இதம்பாடல், ஏா்வாடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 2018- 19 ஆம் ஆண்டுக்கு பயிா்காப்பீடு செய்துள்ளனா். அவா்களில் சிக்கல் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் 25 சதவீத காப்பீட்டு தொகையே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவா்களுக்கும் ஏனைய பகுதி விவசாயிகளைப் போல முழுத்தொகையை அளிக்கவேண்டும்.
சிக்கல் பகுதியில் விரைவில் நெல் அறுவடை தொடங்க உள்ளது. எனவே அரசு நேரடி கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



