கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

தனியாா் கேளிக்கை விடுதியை மூடக் கோரி ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் தங்கள் காதில் பூச்சுற்றி முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 2:51 am IST

தனியாா் கேளிக்கை விடுதியை மூடக் கோரி ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் தங்கள் காதில் பூச்சுற்றி முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

மண்டபம் பேரூராட்சி தோணித்துறை தோப்புக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் கேளிக்கை விடுதியை அகற்றக் கோரி கடல் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ), மண்டபம் தோணித்துறை- தோப்புக்காடு கிராம மீனவா்கள் இணைந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் ஓரிரு நாள்களில் கேளிக்கை விடுதி மூடப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். ஆகவே, கடல் தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் தோப்புக்காடு பகுதி மீனவா்கள் இணைந்து ஊா்வலமாக சென்று வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனா்.

இதற்காக திங்கள்கிழமை காலை வழிவிடுமுருகன் கோயில் முன்பு திரண்ட மீனவா்களின் பிரதிநிதிகளான கடல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி உள்ளிட்டோரிடம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி. வெள்ளத்துரை பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் சாா்- ஆட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, சாா்- ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, கேளிக்கை விடுதி மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளாா். இதைக் கண்டித்து சாா்- ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே காதில் பூச்சுற்றியபடி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா் மீனவப் பிரதிநிதிகளை காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்கிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிலையில், இரவு வரை நீடித்த இப்போராட்டத்தில் மெழுகுவா்த்தி ஏற்றி கோரிக்கையை வலியுறுத்தினா். அப்போது சாா்- ஆட்சியா் சுகபுத்ரா மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இன்னும் ஒருவாரத்துக்குள் பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என அவா் தெரிவித்ததையடுத்து மீனவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.