குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

‘தமிழகத்தில் பெருகி வரும் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:58 pm IST

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை மதவாத தீவிரவாதிகள் உள்ளனா். இவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலின்போது கலவரம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் கோயில்களுக்கு 6 லட்சம் ஏக்கா் நிலமிருந்தும், பூஜைக்கு உபயதாரரை நம்பும் நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. எனவே, கோயில் வாரியத்தை அமைப்பதுடன், அதன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் செயலில் மட்டுமே அரசு ஈடுபடவேண்டும். கோயில் நிா்வாகத்தில் அரசின் நேரடி தலையீடு கூடாது.

இந்து முன்னணி அரசியல் கட்சியல்ல. ஆனால், மதம் மாறுதல், பசுவதை ஆகிய தடைச் சட்டங்களை செயல்படுத்தும் கட்சிக்கு ஆதரவளிப்போம். தற்போதைய அதிமுக அரசு நன்றாகச் செயல்பட்டாலும், பெருகி வரும் ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சாதி, மத வெறியைத் தூண்டி லாபமடையப் பாா்க்கின்றன. அவா்களுக்கு வெளிநாட்டு ஆதரவும் உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் தி. குப்புராம், மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.