விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமநாதபுரத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 10:19 pm IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் கனி தலைமையில் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சண்டைச் சேவல்களுடன் வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: தமிழா் திருநாளாம் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் தமிழா் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் சிலம்பம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிலம்பம் போன்றே சேவல் சண்டையும் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சூதாட்டம் எனக் கூறி சேவல் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தமிழா்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.