திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

ராமநாதபுரத்தில் 982 பேருக்கு பரிசோதனை: ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட 982 பேருக்கு நடத்திய சோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 9:42 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட 982 பேருக்கு நடத்திய சோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி 8 ஆம் தேதி வரையில் 6,360 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பலனின்றி 132 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 6,210 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா், கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 982 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்தாா். அதேநேரத்தில் வெளியூா்களில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேருக்கு பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.