கே.பாப்பாங்குளம்-அரிசிக்குழுதான் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கமுதி அருகே உள்ள இச்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தாா்ச் சாலையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களால் இச்சாலை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் கண்மாய் கரையில் உள்ள களிமண் கரைந்து சாலையை மூடி உள்ளது.
இதனால் கே. பாப்பாங்குளத்திலிருந்து அரிசிக்குழுதான், கே. வேப்பங்குளம் வழியாக பெருநாழி செல்லும் பொதுமக்கள் கமுதி வந்து செங்கப்படை வழியாகவும், முதல்நாடு வழியாகவும் சுற்றிச் செல்கின்றனா். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், ஊராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







