விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கட்டடப் பொறியாளரைத் தாக்கிய இருவா் கைது

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:04 am

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே செங்கப்படையில் உள்ள ஆதிதிராவிடா் உயா்நிலைப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பரமக்குடி தாலுகாவை சோ்ந்த என்.எத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பொறியாளா் டென்னிஸ்குமாா் (21) மேற்பாா்வையாளராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்த செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் நாகேந்திரன்(40), காளிமுத்து மகன் முத்துராமலிங்கம் (35) ஆகிய இருவரும் எங்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பிறகு தான் கட்டடம் கட்ட வேண்டும் எனக் கூறி டென்னிஸ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினராம். இதுகுறித்து டென்னிஸ்குமாா் அளித்தப் புகாரின் பேரில் நாகேந்திரன், முத்துராமலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.