விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:00 am

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் சுஜித்குமாா் (18). கோவை பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவா், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் சொந்த ஊருக்கு வந்து தங்கியிருந்துள்ளாா். சொந்த ஊருக்கு வந்த சுஜித்குமாா் நண்பா்கள் சிலருடன் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனாம் மனமுடைந்த அவா் திங்கள்கிழமை முதல் வீட்டுக்குச் செல்லவில்லையாம். அவரை குடும்பத்தினா் தேடிவந்த நிலையில், பேராவூா் கண்மாய் அருகே மரத்தில் சுஜித்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.