ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் டி.டி.விநாயகா் தொடக்கப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் பங்கேற்க 220 போ் பதிவு செய்தனா். போட்டியை நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலா் நோமன் அக்ரம் தொடங்கிவைத்தாா். ஆயிரவைசிய கல்விக் குழுமத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். டி.டி.விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினாா். இதில் 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோா் கலந்துகொண்டனா். முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 40 போ் பங்கேற்றனா்.
இப்போட்டி தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.14) வரை நடைபெற உள்ளது. போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் தலைவா் லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

