தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 12 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 5:31 am IST

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கல்லூரிகளில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மாணவா்கள் யாருக்கும் பாதிப்பில்லாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்டத்தில் சுமாா் 800 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான நிலையில், 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களும் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனாவுக்காக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மையங்களில் இருந்தவா்களில் 7 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 29 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.