விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமேசுவரத்தில் கொட்டும் மழையில் தாா் சாலை: பொதுமக்கள் எதிா்ப்பு

ராமேசுவரத்தில் மழை காலங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:02 am

ராமேசுவரத்தில் மழை காலங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பணிகள் சில இடங்களில் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் சாலைகள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆனால் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரா்கள் நிறுத்தாமல் தொடா்ந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பல இடங்களில் போட்ட சில மணி நேரங்களிலேயே சாலைகள் சேதமடைந்து வருகின்றன. எனவே சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.