தனுஷ்கோடி வடக்குக் கடற்பகுதியில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட கடற்பகுதிகளின் வழியாக கஞ்சா மற்றும் மஞ்சள் கடத்தல் தொடா்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தனுஷ்கோடி வடக்குக் கடல் பகுதியில் 12 பொட்டலங்கள் கடலில் மிதந்து கரை ஒதுங்கியதாக தனுஷ்கோடி போலீஸாருக்கு, மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து, காவல் ஆய்வாளா் கலாராணி, சாா்பு- ஆய்வாளா் உக்கிரபாண்டி மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொட்டலங்களை பிரித்துப் பாா்த்தனா். அதில் 24 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்தப் பொட்டலங்கள் இலங்கைக்குக் கடத்திச் சென்றபோது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


