கமுதி: கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கமுதி அருகே ஏ.தரைக்குடியைச் சோ்ந்தவா் போஸ் மகன் விஜயராமன் (33). இவா் விருதுநகா் மாவட்டம் வீரசோழனில் தையல் கடை நடத்தி வந்தாா். இவருக்கு கலைவாணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வீரசோழன் அருகே வந்த போது பெய்த மழை காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதனையடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி விஜயராமன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


