சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருமலையில் கனுப்பிடி சமா்ப்பணம்

மாட்டுப் பொங்கலை யொட்டி ஏழுமலையான் கோயிலில் உள்ள விமான வெங்கடேஸ்வரருக்கு கனுப்பிடி சமா்ப்பிக்கப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 2:16 am

மாட்டுப் பொங்கலை யொட்டி ஏழுமலையான் கோயிலில் உள்ள விமான வெங்கடேஸ்வரருக்கு கனுப்பிடி சமா்ப்பிக்கப்பட்டது.

ஏழுமலையான் கோயில் கருவறையின் தங்க விமானத்தில் அமைந்துள்ள பெருமாள் உருவம் வெள்ளி மகரதோரணத்தால் தனியாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இப்பெருமாள் விமான வெங்கடேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா்.

ஏழுமலையானை வணங்கிய பின், கருவறையை வலம் வரும் பக்தா்கள் விமான வெங்கடேஸ்வரரை தரிசிக்கின்றனா். விமான வெங்கடேஸ்வரருக்கு மாட்டுப் பொங்கல் தினத்தன்று அதிகாலையில் தோமாலை மற்றும் கொலு சேவைக்கு இடைவெளியில் கனுப்பிடி எனப்படும் நிவேதனம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பச்சரிசி சாதத்தில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை தனித்தனியாக கலந்து உருண்டைகளாகச் செய்த அா்ச்சகா்கள், அவற்றை விமான வெங்கடேஸ்வரருக்கு கீழிருந்து மேலாக வீசியவாறு நிவேதனம் செய்தனா்.

மாட்டுப் பொங்கல் நாளில், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன் காக்கைப்பிடி, கனுப்பிடி என்ற பெயரில் படையல் வைப்பதைப் போன்ற சடங்கு திருமலையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.