சபரிமலையில் ஜனவரி 14-ல் மகரசங்கராந்தி நெய் அபிஷேகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் ஜனவரி 14 காலை 6.56 மணிக்கு நடைபெறும். இதற்காக திருவாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு நெய் சபரிமலைக்கு கொண்டுவரப்படும் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.
சபரிமலையில் ஜனவரி 14-ல் மகரசங்கராந்தி நெய் அபிஷேகம்
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் ஜனவரி 14 காலை 6.56 மணிக்கு நடைபெறும். இதற்காக திருவாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு நெய் சபரிமலைக்கு கொண்டுவரப்படும் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.

சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மகரஜோதி பூஜை வழிபாடு, நெய் அபிஷேகம் கடந்த டிசம்பர் 31 முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அன்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்துசெல்கின்றனர். தொடர்ந்து ஜனவரி 20 வரை கோயில் நடைதிறந்திருக்கும். ஜனவரி 14-ல் பிரசித்திபெற்ற மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

ஜனவரி 18 வரை பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். மாலை 5 மணிக்குப் பிறகு எருமேலி பெருவழி நடைபாதை வழியாகவும், உப்புப்பாறை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல கேரள போலீஸார் தடைவிதித்துள்ளதால் மாலையில் எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com