சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் 10ம் நாளான தேரோட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 11:24 am

கே சுப்பிரமணியன்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் 10ம் நாளான தேரோட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஆவணி திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இக்கோயிலில் பிரசித்தி பற்றி ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.

அதிகாலை 5 மணிக்கு அம்மனின் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் துவங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க நடராஜவல்லவராயர் கொடியேற்றினார். கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் கொடிமரம் தர்பபைபுல் மற்றும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.10 மணிக்கு கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள், கோயில் திருவிழா கிளார்க் பிச்சையா, சிவன் கோயில் மணியம் மது, அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கார்க்கி, வேலாண்டி ஒதுவார், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். விழாவின் 10ம் நாளான(10ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பரஞ்ஜோதி ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.