ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருக்கலாமா? ஒருவேளை அப்படி இருந்தால் என்ன ஆகும்? என சந்தேகங்கள் பலருக்குத் தோன்றும். அப்படி இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்று யோசிப்பவராக இருந்தால்....படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தை ஆளும் பொறுப்பு கணவன் - மனைவி இருவருக்குமே உள்ளது. இவர்கள் ஒரே ராசியாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பது ஜாதகம் சொல்கிறது. பெரும்பாலும் நம் பெற்றோர்கள் திருமணத்திற்கு முன்னரே ராசி பொருத்தம் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா எனப் பார்த்து தான் மணம் முடிப்பார்கள். ஆனால் பெற்றோர் கையை மீறிக் காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படும் போது சிலருக்கு ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. சரி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்காவது மாறும் என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கும் ஒரே ராசியாகவே அமைந்துவிடுகிறது. ஆக ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
அவ்வாறு ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேருக்கு ஏக ராசியாக அமையும் பட்சத்தில், அந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதின் மூலம் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள மூவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். இதனால், குடும்பத்தில் எந்த நேரமும் சண்டை, சச்சரவு, பிரிவு, பொருள் இழப்பு, விபத்து எனச் சொல்ல முடியாத அளவிற்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு மாறாக அந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருந்து விட்டால் பிரச்னையே இல்லை. கூட கோபுரமும், மாட மாளிகையும் எனக் கோபுரத்தின் உச்சிக்கு வந்துவிடுவர்.
என்ன பரிகாரம் செய்யலாம்:
இவர்கள் சம்ஹார ஸ்தலங்களுக்கு (அதாவது கடலோரமாக உள்ள கோவில்களுக்கு) சென்று வழிபாடு நடத்தலாம் என முன்னோர்கள் பழைய நூலில் கணித்து வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். மேலும், பிரதி வாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரத்திற்கு எள் விளக்கிட்டு 27 முறை சுற்றி வரலாம். கிரகங்களின் தாக்கம் குறையும்.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் நேரத்தில், குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளாக இருப்பின் உறவினர் வீடு அல்லது விடுதி ஆகிய இடங்களில் தங்கலாம். கணவன் மனைவியாக இருந்தால் கிரக நிலைகளின் தாக்கம் குறையும் வரை பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெறும் காலங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


