ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தையொட்டி, திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தில் காமாட்சி அம்மனுக்கு லட்ச குங்குமாா்ச்சனை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை காமாட்சியை அபிஷேகத்திற்கு பின் அலங்காரம் செய்து அமர வைத்து அவரின் இருபுறமும் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியை அலங்காரம் செய்து அமர வைத்து அவா்கள் முன் லட்ச குங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது. அதற்கு முன் கலசஸ்தாபன, கணபதி பூஜை, புண்ணியாவாசனம், கலசாராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பொது முடக்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை நிகழ்ச்சி தனிமையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!
வீடியோக்கள்

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை


