நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜனவரி 2020, 6:58 am

தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும்.

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளைநோயால் அவதியுற்ற போது, இக்கோயிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசன உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டு இன்று திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜரை மாணிக்கவாசகர் எதிர்கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவமும், அதனைத்தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.