அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது பஞ்சாலைப் பேருந்து மோதி பெண் பலி
அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்துடன் தனியார் பஞ்சாலைப் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்துடன் தனியார் பஞ்சாலைப் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை காந்தி நகரில் வசிப்பவர் சீனி பாக்கியம். இவர் சனிக்கிழமை பிற்பகல் காந்தி நகரை அடுத்துள்ள ஜெயராம் நகரருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சுமார் 4 மணியளவில் சாலை வளைவில் எதிரே வந்த தனியார் பஞ்சாலைப் பேருந்து மீது மோதியதில் அப்பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விபத்து நடந்த விதம் குறித்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் ஒட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...