கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின
இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து ஒருப்படுகின்றது
விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே.
பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
குருகுகள் = பறவைகள். தாரகை = நட்சத்திரம். ஓவின = ஒழிந்தன, நீங்கின.
பொருள்
பொழுது புலர்ந்ததை உணர்த்தும் வண்ணம், குயில்கள் கூவின, கோழிகள் கூவின, பறவைகளும் ஒலி எழுப்பின, வெண் சங்குகள் ஒலித்தன. சூரியனின் ஒளி பரவவே வானத்தில் அதுவரை ஒளி வீசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் மறைந்தன. உதய காலத்தில் பரவும் ஒளி ஒருங்கு திரண்டு மிளிர்கின்றது. இறைவனே, நீ மிகுந்த விருப்பத்தோடு, வீரம் செறிந்த கழல்கள் அணிந்த சேவடிகளை எங்களுக்கு காட்டி அருள்வாயாக. திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, யாவரும் அறிவதற்கு அரியவனாக இருப்பவனே, எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு எளியவனாக காட்சி தருபவனே, எம்பெருமானே நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

