அதன் பின்னர் ஸ்ரீபிரம்மபுரீசுவரர், ஸ்ரீபழமலைநாதர், ஸ்ரீ பாதாள ஈசுவரர், ஸ்ரீ சுத்தரத்தினேசுவரர், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ சப்தரிஷீசுவரர், ஸ்ரீ காளத்திநாதர், ஸ்ரீ சம்புகேசுவரர், ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், மண்டுகநாதர் ஆகிய 12 வகையான லிங்கங்களை பிடவூரில் பிரதிஷ்டை செய்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தார் பிரம்மா. முக்கண்ணன் மலரோன் பக்திக்குத் திருவுள்ளம் கனிந்து, நான்முகா, என் மீதுள்ள பக்தியின் மிகுதியால் எம்மை வணங்கி வழிபட்டு, பூஜித்து மகிழ்வித்த உனது சிரேஷ்டான அன்பிற்கு யாம் உளம் மகிழ்ந்தோம். வேண்டும் வரம் கேள் என்றார் ஈசன்.