காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு

விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

News image

வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு

Updated On :9 செப்டம்பர் 2021, 4:30 am

DIN

• விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் பல. யானை முகத்துடன் காட்சி தரும் விநாயகர், பெண் வடிவிலும் சில திருத்தலங்களில் அருள்புரிகிறார். தாய் தெய்வங்கள் வரிசையில் சக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

• யானை முகம், கால் முதல் இடை வரை புலியின் உருவம், இடை முதல் கழுத்து வரை பெண் வடிவத்தில் அருள்புரியும் விநாயகரை "வியாக்ர சக்தி விநாயகர்' என்பர். இந்த புதுமையான வடிவத்தினை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் முன் மண்டபத்தில் காணலாம்.

• கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம், பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம்.

• இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம், வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம்.

• சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிள்ளையார்பட்டி திருத்தலத்தில் அமர்ந்த நிலையில் அருள்புரியும் கற்பக விநாயகர் இருகரங்கள் கொண்டு எழுந்தருளியுள்ளார். வலது கரத்தில் சிறிய சிவலிங்கத்தினை ஏந்தியுள்ளார். இடது கரத்தினை தொடையில் வைத்துள்ளார். இவரைச் சுற்றி ஒன்பது சர விளக்குகள் தொங்குகின்றன. அவை; நவக்கிரகங்களைக் குறிக்கின்றன.

• பிள்ளையார்பட்டி தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவீசர் நகரில் ஸ்ரீ சித்ரகுப்தர் ஆலய வளாகத்தில் அருள்புரியும் ஸ்ரீ குபேர விநாயகர் இரு திருக்கரங்களுடன் விளங்குகிறார். மேலும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் தோற்றத்தில் இரு கரங்களையும் சற்று தூக்கி அபயம் அளிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

• இரு கரங்களுடன் காட்சி தரும் விநாயகர்களைப்போல் நான்கு திருக்கரங்களுடன் அருள்புரியும் விநாயகர்கள் தங்கள் கரங்களில் வேறு வகையான பொருள்களையும் வைத்திருப்பதை தரிசிக்கலாம். அந்த வகையில் சங்கரன் கோயில் திருத்தலத்தில் "சர்ப்ப விநாயகர்' தன்னிருகைகளில் சர்ப்பங்களை ஏந்தி அருள்புரிகிறார்.

• திருச்சி ஜெயம்கொண்டம் தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ வைரவனீச்சுவரர் ஆலயத்தில் "வில்' ஏந்திய விநாயகர் காட்சி தருகிறார். இவர், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் ஏவுவதற்கு கற்றுக் கொடுத்ததாக சொல்வர்.

• மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்கா பூலாம்பட்டி மத்தங்கரை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கோடாரி ஏந்தி காட்சி தருகிறார்.

• முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் உள்ள தலத்தின் தலமரம் மாமரம். அதனால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு. அதற்கு ஏற்ப இத்தல விநாயகர் திருக்கரத்தில் மா இலையை ஏந்தி அருள்கிறார்.

• ராஜபாளையத்தை அடுத்துள்ள அமியாச்சிபட்டி எனும் ஊரில் பருத்திக்காட்டுப் பகுதியில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

• சேலம் நகரின் மையப்பகுதியில் "செர்ரி' சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயிலில் அருள்புரியும் விநாயகர், தம் இரு கரங்களிலும் கொழுக்கட்டை ஏந்தியவாறு காட்சி தருகிறார்.

• விநாயகப் பெருமான் எந்தவிதத் தோற்றத்தில் காட்சி தந்தாலும் அவரை வழிபட, வேண்டியது கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.