மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஸ்ரீமீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில், கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், 18-வது ஆண்டாக இந்தக் கல்யாண விருந்து, மே மாதம் 6-ம் தேதி இரவு மற்றும் 7-ம் தேதி காலை என்று மொத்தம் 75 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
விருந்து மற்றும் விருந்துக்குத் தேவையான பொருள்களை அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் ஆன்மிக அன்பர்கள் மற்றும் இத்தொண்டில் கலந்துகொண்டு சேவையாற்ற விருப்புவர்கள், கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் : 9442408009, 9841267823.
கடந்த ஆண்டு நடைபெற்ற திருக்கல்யாண விருந்து தயாரிப்புப் புகைப்படங்கள்