ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
ஐப்பசி மாத பௌர்ணமி: இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) பகல் 1.20 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (நவம்பர் 4) காலை 11.40 மணிக்கு முடிவடைகிறது. எனவே, திருவண்ணாமலையில் பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.