தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குமரகோட்டத்தில் அணைய விளக்கு: ரூ.4-க்கு நெய் விற்பனை 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள குமரகோட்டத்தில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால்

குமரகோட்டம் சுப்பிரமணியர் கோயில்.

Published On :

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள குமரகோட்டத்தில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால், அணையா விளக்கில் ஊற்ற நெய் விற்பனை செய்யப்படுகிறது. 

முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும் கோயில் நகரமான காஞ்சியில் அமைந்த குமரக்கோட்டம் தான். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது. 

எண்ணற்ற பெருமைகளை கொண்ட குமரகோட்டம் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் விளக்குகளால், அவ்வவ்போது சில விபத்துகள் ஏற்படுகின்றன. கோயில்களில் தீ விபத்துகளை தடுக்க அனைத்து கோயில்களிலும் அணையா விளக்கு வைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயிலில் அகல் விளக்கு ஏற்ற கோயிலின் வடமேற்கு திசையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அகல் விளக்கு ஏற்ற கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் விளக்கு விற்பனை நிறுத்தப்பட்டதால் அதற்கு பதில் ஒரு சிறிய பாட்டியில் ரூ.4-க்கு நெய் விற்பனை துவங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்றை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.