திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு பால்குட விழா மற்றும் ஆடிப்பூர விழா வரும் 13ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரம சுவாமி சங்கரானந்தா ஆசியுடன் நடைபெறவுள்ள இந்த விழாவை முன்னிட்டு 13ஆம் தேதி காலை சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி ஆலய மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார ம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். அடுத்து மானாம்பதி பஜார்வீதி காளியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு சீரங்கத்தம்மனுக்கும் செல்லியம்மனுக்கும் பக்தர்களின் கரங்களால் பால்குட அபிஷேகம் நடைபெறும்.
அன்று பிற்பகல் சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடத்தி, தீபாராதனை காட்டப்படும். அடுத்து மாலை பெண்களால் அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அம்மன் புறப்பாடும் நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மானாம்பதி கிராமத்தார் மற்றும் சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது!

மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
மணப்பாறையில் உலர் துறைமுகம்: தொழில் துறையினர் பெரும் எதிர்பார்ப்பு
மீனாட்சிபுரம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக்கப்படுமா?
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


