வரும் 27ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய, சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் மற்ற கோயில்களில் கிரகண காலத்துக்கு 5 மணிநேரத்திற்கு
முன்பே நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்தவுடன் நடை திறந்து, சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்ற பின் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது வழக்கம்.
எனினும், காளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலத்தில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் 27ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
கிரகணத்துக்கு இடையில் அதாவது நள்ளிரவு 1.53 மணிக்கு இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே கோயிலுக்கு வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









