92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :23 ஜூன் 2018, 9:14 am

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. 

இதற்காக, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜையும் நடைபெற்றது. 

தொடர்ந்து, காலை 8.30 - 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்றிரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.