திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதற்காக, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 8.30 - 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்றிரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.