மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்)

சைவ சமய வரலாற்றில் காரைக்கால் அம்மையார் வரலாறு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. 

News image
Updated On :27 ஜூன் 2018, 6:57 am

DIN

சைவ சமய வரலாற்றில் காரைக்கால் அம்மையார் வரலாறு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. 

புனிதவதியார் என்ற இயற்யெர் பெற்ற அம்மையார் பரமதத்தனை மணந்து வாழ்ந்த பொழுது, இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. பரமதத்தன் புனிதவதியாரை தெய்வ அம்சமாகவே கருதினான். எனவே புனிதவதியார் இல்லற வாழ்விளை துறக்க, பேய் வடிவினை தனக்கு தருதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டினார். 

இறைவன் அருளால் 'அற்புதத்திருவந்தாதி' திருவிரட்டை மணிமாலை என்ற இரண்டு பதிகங்களை அளித்தருளினார். இறைவனைக்கண்டு வணங்கி போற்ற கைலாயம் சென்றார். புனிதமான கைலாய மலையை காலால் மிதித்து நடக்கக்கூடாது என எண்ணித் தலையால் நடந்து சென்றார். காரைக்கால் அம்மையாரின் இறை பக்தியைக் கண்ட இறைவன் அம்மையே என அழைத்துப் போற்றியதை பெரியபுராணம் கூறுகிறது. 

"வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப் 
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பினறை
அருகு வந்தனைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார் 
                                             (பாடல் 1774)

மகிழ்ந்த இறைவனிடம் நீ ஆடும்பொழுது உனது திருவடியின் கீழ் இருட்ககும் பேறு வேண்டும் என வேண்டிப் பெற்றார். மேலும், ரத்னசபை என அழைக்கப்படும் திருவாலங்காட்டில் ஆடும் ஊர்த்துவ நடனத்தை கண்டு பாடியவண்ணம் இரு என இறைவனால் அருள் பெற்றார். திருவாலங்காடு திருத்தலத்திற்கும் தலையால் நடந்துபோய் "மூத்தத் திருப்பதிகத்தையும்" பாடி அருளினார். 

Story image

இறைவன் ஆடவல்லானாக காட்சிதரும் சிற்பங்களில் இறைவன் காலடியின் கீழ் எலும்பு உருவம் கொண்டு காரைக்கால் அம்மையார் தானம் இடுவதைக் காணலாம். அம்மையாரை செப்புத்திருமேனிகளிலும் காணலாம். கங்கைகொண்ட சோழபுரம், திருவாலங்காடு, மதுரை போன்ற பல திருக்கோயில் சிற்பங்களில் காரைக்கால் அம்மையாரைக் கண்டு வணங்கலாம். 

அவரது வரலாற்றில் கைலை மலையில் காலால் மிதிக்காமல் தலையால் நடந்துசென்றதாக பெரிய புராணம் கூறுகிறது. 

"கைலை வெற்பின் பாங்களைந் தாங்கு காலின் 
நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்
                                         (பாடல் 1771)

பெரியபுராண வரலாற்றை தொடர் சிற்ப வடிவங்களாக கூறும் தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் யானை - மான் - பாம்பு - புலிகள் நடுவே அம்மை பேய் வடிவம் கொண்டு தலையால் நடந்து செல்வது போன்று சிற்பம் காணப்படுகிறது. 
 

- கி. ஸ்ரீதரன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.