அறுபத்து மூவர் உலாவுக்கு காத்திருக்கும் மக்கள்: விழாக்கோலம் பூண்ட மயிலை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 
அறுபத்து மூவர் உலாவுக்கு காத்திருக்கும் மக்கள்: விழாக்கோலம் பூண்ட மயிலை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

சென்னை மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், மதிய உணவு இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்று மாலை 3 மணியளவில் அறுபத்து மூவர் உலா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அப்போது திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதையடுத்து, இரவில் பார்வேட்டை விழா, ஐந்திருமேனிகள் விழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com