மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிக மாற்றம்

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image

காளஹஸ்தியில் தற்காலிகமாக பரிகார பூஜை நடைபெற உள்ள மந்துகொட்டு மண்டபம்.

Updated On :6 நவம்பர் 2018, 2:27 am IST


காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்ய பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் ரூ.500, ரூ.750, ரூ.1,500, ரூ.2,500, ரூ.5,000 என்ற கட்டணங்களின்படி ராகு-கேது பரிகார பூஜை செய்யும் வசதியையும், அதற்கென தனித்தனி இடங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ரூ.500 என்ற கட்டணத்தில் கோயிலுக்கு வெளியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராய மண்டபத்தில் ராகு-கேது பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. 
இந்த மண்டபத்தில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, வரும் 7ஆம் தேதியன்று காலை முதல் சமஷ்டி கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி அந்த பூஜையை கோயிலுக்குள் உள்ள மந்துகொட்டு மண்டபத்திற்கு மேற்கொள்ளலாம். இது ஒரு தற்காலிக மாற்றம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.