சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தீபாவளி பண்டிகை: கேதர்நாத் கோயிலில் மோடி இன்று வழிபாடு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :6 நவம்பர் 2018, 12:46 am IST


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளார். அதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தில் கேதர்நாத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிடவுள்ளார்.
கேதர்நாத் கோயிலில் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டில் சியாச்சின் சிகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 
கடந்த 2015ஆம் ஆண்டில் பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை அவர் கொண்டாடினார். 2016ஆம் ஆண்டில் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். 
2017ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குரேஸில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.