ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :8 நவம்பர் 2018, 12:30 pm

DIN

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழாவாகும். நவம்பர் 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இந்நிலையில் பரணி, மகா தீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச்சீட்டு பார் கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.