சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மும்பையில் 70 கிலோ தங்க நகையுடன் ஜொலித்த பிரம்மாண்ட கணபதி!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 70 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:46 pm

தினமணி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 70 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கௌட் சரஸ்வத் பிரம்மன் என்ற குழு, கடந்த 64 வருடங்களாகப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 70 கிலோ தங்கள் மற்றும் 350 கிலோ வெள்ளியைக் கொண்டு ஆபரணங்களைச் செய்து விநாயகர் சிலைக்கு அணிவித்துள்ளது. 

இந்த நகைகளுக்காகவே 264.75 கோடி ரூபாய்க்கு விநாயகர் சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் இருந்து ஐந்து நாட்களுக்கு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு கருதி 65 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மதிப்புமிக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.