விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய  கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 
விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய  கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும்.  உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள். 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள். 

கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி  உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும். 

வியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். 
மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும். 

பரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். 

உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.  கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். 

கலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும். 

உற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும்.  வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள். 

பழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய  தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது, 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும்.  பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும்.

பங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று  விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள். உடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் புத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள். அதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும். 

வியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள். 

அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். 

கலைத்துறையினருக்கு  இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம். 

பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள். இறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப்பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும். அசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். 

அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான  உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். தடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவர்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். 

உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.  தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். ஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். 

விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.  

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே  செயல்படுத்தவும்.

கலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும். 

பரிகாரம்: "நமசிவாய' என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும்.

******

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசி பலன்களை படிக்க https://goo.gl/u6q875

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசி பலன்களை படிக்க - https://goo.gl/FCqg5X

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com