நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பழனியில் ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்!

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக இன்று  ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2019, 11:28 am IST

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக இன்று  ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார், தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும்  பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வின்ச் மற்றும் படிவழிப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.