ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டத் திருவிழா

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 7:20 am

DIN

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

காலை 7.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 26-ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது. 

27-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28-ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. 

ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.