சோழ வளநாடான தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள குடந்தை மாநகரில் 1000 வருடங்கள் கடந்து மிளிரும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் மட்டுமல்லாமல், சைவ நாயன்மார்கள் மற்றும் வைணவ ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைந்தது.
கும்பகோணத்தில் அமையப்பெற்றுள்ள உலகபுகழ் பெற்ற மகா மகக்குளத்தில் இந்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மாசிமகப் பெருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு, சைவ சிவாலயங்களிலும் மற்றும் வைணவத் தலங்களிலும் மாசிமக உற்சவம் திருக் கொடியேற்றத்துடன் துவங்கியது.
- படங்கள் உதவி (குடந்தை ப.சரவணன் 9443171383)