தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை மாசித் தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி

News image
Updated On :18 பிப்ரவரி 2019, 6:47 am

தினமணி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித்  திருவிழாவையொட்டி நாளை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று சுவாமி தங்க கைலாய பர்வத  வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான நாளை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும்  தேரோட்டம் நடக்கிறது. 

20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும், 21-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.